Tuesday, November 5, 2019

கூரை மேலிருந்து விழும் மழைநீர் நல்லதா? - Healer Baskar


கேள்வி 108 : பைபர் கூரையின் மேல் விழுந்து சேகரித்த மழை நீரை பயன்படுத்தலாமா ? ஆபத்தா ? நல்லதா ?  கெட்டதா?.

பதில்:  மழைநீரை எந்த ஒரு பொருள் மேல் விழுகாமல் நேரடியாக ஒரு பாத்திரத்தில் பிடிப்பதுதான் மிக மிக சிறந்தது.

மழைநீரை,  மழை ஆரம்பித்த ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கு பிடிக்கக் கூடாது .ஏனென்றால் வானத்தில் உள்ள குப்பைகள் கலந்து வரும்.

மொட்டைமாடியில் ஒரு வெள்ளை பருத்தி துணியை நான்கு புறமும் கயிறு கட்டி அதற்கு நடுவே ஒரு கல்லை வைத்தால்,  வெள்ளைத்துணியில் நடுப்பக்கத்தில் தண்ணீர் கிடைக்கும் அதை பாத்திரத்தில் பிடிக்க வேண்டும்.

வெறும் பாத்திரத்தை வைத்தால் தண்ணீர் குறைவாக சேரும் வெள்ளை துணி எந்த அளவு  இருக்கிறதோ அந்த அளவு அதிக தண்ணீர் கிடைக்கும்

இந்த சேகரிக்கப்பட்ட மழைநீரை கண்ணாடி பாட்டிலில் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வைத்திருந்தாள் ஆறு வருடம் பாதுகாப்பாக இருக்கும்.

எப்பொழுது மழை நீரில் புழு வருகிறதோ அதன்பிறகு அதை பயன்படுத்த வேண்டாம்.

மழைநீரை தினமும் 100 எம்எல் குடித்துவந்தால் உடலில் அனைத்து வியாதிகளும் குணமாகும் குறிப்பாக சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் குணமாகும்.

நாள் முழுவதும் மழை நீரை குடிக்கக்கூடாது. சாதாரண தண்ணீரைத் தான் குடிக்க வேண்டும் மழைநீரை மருந்தாக மட்டும் பயன்படுத்தலாம்.

மழை நீரை ஒரு நாளில் ஒரு மனிதன் 100 எம்எல் முதல் ஒரு லிட்டர் வரை குடிக்கலாம்.

மொட்டை மாடியில் கூரை மேல் விழுந்து வரும் தண்ணீரை பிடித்து குடிப்பது சரி என்றும் சொல்ல முடியாது.  தவறு என்றும் சொல்ல முடியாது. இது நூறு விஷயத்தை பொருத்தது.

உங்கள் கூரை எந்த பொருளால் செய்யப்பட்டது, காங்கிரிட்டா, பிளாஸ்டிக்கா,  கூரையில் காக்கா கக்கா போய் இருந்ததா, பல்லி செத்து இருந்ததா, பக்கத்து வீட்டுக்காரர் குப்பை போட்டிருக்கிறாரா, அந்தக் குறைகள் என்னென்ன ஒட்டி இருக்கிறது, அந்தக் கூரையில் தண்ணீர் படும்போது கூரையின் தன்மையை தண்ணீர் வருகிறதா? இல்லையா?  இது போன்ற 100 விஷயத்தை பொறுத்து தான் பதில் சொல்ல முடியும்.

எனவே முடிந்தவரை நேரடியாக பாத்திரத்தில் பிடித்து பயன்படுத்துவது சிறந்தது.

ஒருவேளை உங்கள் கூரை தூய்மையாக இருந்து மழைநீர் படும்பொழுது கூரையுடன் வேதியல் விளைவு எனப்படும் கெமிக்கல் ரியாக்சன் ஆகாத பட்சத்தில் நாம் அதை பிடித்து குடிப்பது சிறந்தது.

மழைநீர் தினமும் 100ml முதல் ஒரு லிட்டர் வரை குடித்து வந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் மற்றும் அனைவருக்கும் சிறு நீரக சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் குணமாவதற்கு ஒரு அரிய மருந்தாக இருக்கும் .மழைநீர் சர்வரோக நிவாரணி, அனைவரும் எந்த வயதினரும் எந்த வியாதிக்கும் குடிக்கலாம்.

இப்படிக்கு 
ஹீலர் பாஸ்கர்
+91- 9944221007.

No comments:

Post a Comment