கேள்வி எண் 103 :மௌனத்திற்கு சும்மா இருப்பதற்கும் என்ன வித்தியாசம் ?
பதில் : மௌனம் என்பது பேசாமலிருப்பது. அதாவது வாயை வைத்து உச்சரிக்கும் பேச்சை முற்றிலுமாக நிறுத்துவதற்கு பெயர் மௌனம்.
மௌனத்தில் இருக்கும் பொழுது நீங்கள் கார் ஓட்டலாம் ,சமையல் செய்யலாம் ,டிவி பார்க்கலாம், நடக்கலாம் ,யோகா செய்யலாம்.
ஆனால் சும்மா இருப்பது என்றால் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பது. சும்மா இருக்கும் போது டிவி பார்க்கக்கூடாது ,கார் ஓட்ட கூடாது, சமையல் செய்யக்கூடாது ,பேசக்கூடாது எதுவுமே செய்யக்கூடாது.
மௌனத்தின் பொழுது வாயால் உச்சரிப்பால் பேசக் கூடாதே தவிர யோசிக்கலாம், சிந்திக்கலாம்.
சும்மா இருத்தல் என்றால் ,யோசிக்கும், சிந்திக்கும் செயலை மட்டும் தான் செய்யவேண்டும் .வேற எந்த செயலையும் செய்யக்கூடாது .தேவைப்பட்டால் நடக்கலாம், ஆனால் வேலை நிமித்தமாக நடக்கக்கூடாது. சும்மா நடக்கலாம் ,தேவைப்பட்டால் கழுத்தைத் திருப்பலாம்( உங்கள் கழுத்தை) , உட்காரலாம் ,நிற்கலாம் ,நடக்கலாம் ஆனால் இதற்கு ஒரு காரணம் இல்லாமல் விலங்கைப் போல குழந்தையைப்போல செய்ய வேண்டுமே தவிர, ஒரு வேலை செய்வதற்காக உடலுறுப்புகளை இயக்கக் கூடாது .சும்மா குழந்தைபோல இயக்கலாம்.
சும்மா இருப்பது என்றால் புதிதாக எந்த குப்பையையும் உள்ளே அனுப்பாமல் , ஏற்கனவே இருக்கும் குப்பைகளை வெளியேற்றம் செய்வதே ஆகும்.
மௌனம் என்பது வாய்க்கு மட்டும் பேசும் வேலையை கொடுக்கக்கூடாது ஆனால் மற்ற அனைத்து வேலைகளையும் செய்யலாம்.
சும்மா இருத்தல் என்பது மூளைக்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது.
இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.
சும்மா இருத்தல் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் " சும்மா இரு" என்ற தலைப்பில் எனது அமைதியும் ஆரோக்கியமும் என்ற மாத இதழில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் .இதை முழுவதுமாக படியுங்கள் உங்களுக்கு புரியும்.
இந்த கட்டுரை இன்று டெலிகிராமில் இணைத்துள்ளேன் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்.
+91-9944221007.
No comments:
Post a Comment