Tuesday, November 12, 2019

மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்!


மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்!


கேள்வி எண் 115 விதைகள் இல்லாமல் மரத்தை உருவாக்க முடியுமா?

பதில்: விதைகள் இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்துக்கொண்டு மரங்களை உருவாக்க முடியும்.

மரத்தின் ஒரே ஒரு இலையை பறித்து அதை இளநீரில் ஊறவைத்து, பின் சுமார் 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் வைத்து பராமரித்தால் 4 முதல் 5 வாரங்களில் இலையில் இருந்து வேர் வளரத் தொடங்கி, 8 முதல் 10 வாரத்தில் அது ஓர் செடியாக வளரத் தொடங்கி விடும்.

இதன் மூலமாக உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறைகிறதாம். அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கும்.

இந்த அற்புத வித்தையை கண்டுபிடித்தவர்
கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம்  , ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளர்.S. ராஜரத்தினம்.

 தமிழகத்தில் மட்டும் சுமார் 90 கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதை கற்றுக் கொடுத்துள்ளார்.

இவரது அற்புதமான கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.

இவரை நாம் பாதுகாக்க வேண்டும் .இவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் .இவருக்கு நாம் சப்போர்ட் செய்ய வேண்டும் .இதன் மூலமாக இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு நாம் அவருடன் சேர்ந்து பணி செய்வோமாக.

மேலும் விவரங்களுக்கு.
.S. ராஜரத்தினம்
23-15, கருப்பாயம்மாள் பண்ணை, வெள்ளிபாளையம் சாலை, மேட்டுப்பாளையம், கோவை.
pH :  9486094670  edennurserygardens@gmail.com  www.edunnurserygardens.com.

இப்படிக்கு .
ஹீலர் பாஸ்கர்.
www.anatomictherapy.org.

நாடிசுத்தி மூச்சு பயிற்சியின்போது ஒருநாசி அடைப்பிற்கு தீர்வு - ஹீலர் பாஸ்கர்


கேள்வி எண் 114: நாடி சுத்தி மூச்சு பயிற்சி என்பது இரு நாசியிலும் மாறிமாறி மூச்சு இழுத்து விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

எனக்கு ஒரு நாசிகள் வழியாக மட்டுமே காற்று உள்ளே சென்று வெளியே வருகிறது மற்றொரு நாசி எப்பொழுதுமே அடைத்திருக்கிறது.

இதன் காரணம் என்ன? தீர்வு என்ன?

பதில் : இதற்குக் காரணம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.

எனவே நீங்கள் முதலில் உடல் பயிற்சிகள் சூரிய நமஸ்காரம் ஆசனங்களை வாக்கிங் ஜாக்கிங் மற்றும் ஸ்கிப்பிங் போன்ற உடல் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை மட்டும் செய்யுங்கள்.

மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டாம்.

வாரம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள் 

எப்பொழுது இருபக்கமும் மூச்சுக்காற்று சென்று வருகிறதோ அப்பொழுது மூச்சுப்பயிற்சி செய்தால் போதும்.

உடலை ஒழுங்கு செய்த பிறகுதான் மூச்சை ஒழுங்கு செய்ய முடியும்.

அன்னமய கோசம் என்ற உடல் ஒழுங்காக இருந்தால்தான் பிராணமய கோசம் என்ற மூச்சு ஒழுங்காக இருக்கும்.

பிராணமய கோசம் ஒழுங்காக இருந்தால்தான் மனோஅமய கோசம் எனப்படும் மனம் ஒழுங்காகும்.

எனவே முதலில் உடலை ஒழுங்கு செய்யும் பயிற்சிகளை மட்டும் செய்துவாருங்கள்.

உங்களுடன் ஆரோக்கியம் அடைந்தபிறகு மூச்சுப் பயிற்சி செய்யலாம்.

இப்படிக்கு 
ஹீலர் பாஸ்கர்
பானு வீட்டுக் கல்வி முறை
+918220667135.

Saturday, November 9, 2019

பூரான் கடிக்கு மருந்து - ஹீலர் பாஸ்கர்

கேள்வி எண் 112 : பூரான் கடிக்கு இயற்கை வைத்தியம் என்ன?

பதில் : பூரான் கடிக்கு இரண்டு மருந்துகள் உள்ளது . 

ஒன்று பூரான் கடித்த இடத்தில் வெளிப்புறமாக தடவும் மருந்து.

இரண்டு விஷத்தை முறிக்கும் வயிற்றுக்குள் கொடுக்கும் மருந்து.

வெளிப்புறமாக பூரான் கடித்த இடத்தில் தடவுவதற்கு மூன்று வகையான மருந்துகள் உள்ளது.

ஒன்று சுண்ணாம்பை தடவலாம்.

இரண்டு வெற்றிலையையும் குறு மிளகையும் மை போல அரைத்து தடவலாம்.

மூன்று குப்பை மேனி இலையும் மஞ்சளையும் ஒன்றாக அரைத்து தடவலாம்.

உற்புறமாக வயிற்றுக்கு கொடுப்பதற்கு மூன்று மருந்துகள் உள்ளது.

ஒன்று சிறுகுறிஞ்சான் இலையை ஐந்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

இரண்டு ஐந்து வேப்ப இலையை கஸ்தூரி மஞ்சளுடன் கலந்து அரைத்து உருண்டை போல் செய்து அதை சாப்பிட வேண்டும்.

மூன்று ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி விட்டு ஐந்து மிளகோடு சேர்த்து அரைத்து அதை சாப்பிட வேண்டும்.

இங்கே நாம் சொல்லிய உட்புறம் மூன்று மருந்தும் வெளிப்புற மூன்று மருந்தும் மொத்தம் ஆறு மருந்தும் மொத்தமாக கண்டிப்பாக எடுக்க  வேண்டிய அவசியம் இல்லை. இதில் எது எது வாய்ப்பு இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். இதில் ஒன்றோ இரண்டோ செய்ய முடியவில்லை என்பதற்காக வருத்தப்பட தேவையில்லை.

பூரான் கடித்தால் மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் 24 மணி நேரத்திற்கு லேசாக கடுகடுப்பாக இருக்கும் .எனவே அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பூரான் கடிக்காக பெயின்கில்லரோ,  ஆன்டிபயாடிக்கோ எடுக்க வேண்டிய அவசியமில்லை.

கண்டிப்பாக அது ஆபத்தை ஏற்படுத்தாது.

இந்த வைத்தியத்தை கற்றுக்கொடுத்த எனது நண்பர் பொள்ளாச்சி ஹீலர் குமார் அவர்களுக்கு நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
மூன்று நாள் வகுப்பு .
சென்னை.
2019 - NOV - 15 , 16 , 17.
PH : +918870666966.

Thursday, November 7, 2019

அல்சருக்கு தீர்வு - Healer Baskar


கேள்வி எண் 111: அல்சர் இருப்பவர்களுக்கு பத்தில் எட்டு பேருக்கு மனதில் பயம் வருகிறது , உடல் நடுங்குகிறது .இதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன?

பதில்:  அல்சர் இருப்பவர்களுக்கு பயம் வரும் , உடல் நடுக்கம் வரும்.

இதற்கு காரணம் அல்சர் அல்ல உடலில் சக்தி குறைவதே.

நாம் சாப்பிடும் சாப்பாடு தான் சத்துப் பொருளாக மாறி எல்லா செல்களுக்கும் போகிறது .

எப்பொழுது அல்சர் இருக்கிறதோ அப்போது சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது .எனவே செல்களுக்குத் தேவையான சத்து கிடைக்காது. எனவே உடல் நடுங்குகிறது மேலும் எப்போது நாம் வீக்காக இருக்கிறோமோ அப்போது பயமாக உணர்வோம். எப்பொழுது சக்தி அதிகமாக இருக்கிறதோ அப்போது தைரியம் வரும் .

தைரியம் என்பது சக்தி மிகுதி . பயம் என்பது சக்தி குறைவு .

அல்சரினால் மட்டும்தான் பயமும் நடுக்கமும் வரும் என்று அர்த்தமில்லை. உடலில் எப்பொழுது சக்தி குறைகிறதோ அப்போது இயற்கையாகவே பயமும் நடுக்கமும் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே பயத்துக்கும் நடுக்கத்திற்கு தனியாக சிகிச்சை செய்ய அவசியமில்லை. உடலில் சக்தி அதிகம் செய்வதற்கு பயிற்சி செய்தால் கண்டிப்பாக நடுக்கத்தையும் பயத்தையும் வராமல் பார்த்துக்கொள்ளலாம் 

அல்சருக்கு என்று தனியாக சிகிச்சை கிடையாது .

எனது  ஐந்து நாள் வகுப்புக்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும் . அல்லது ஐந்து நாள் வீடியோவை முழுவதுமாக பார்க்க வேண்டும் .அல்லது 5 நாள் வகுப்பு ஆடியோவை முழுவதுமாக கேட்க வேண்டும் .

அதில் சொன்ன வழிமுறைகளை சரியாக பயன்படுத்தினால் உடலில் சக்தி அதிகமாகி அதன் மூலமாக அல்சர் குணமாகும். அல்சர் குணமான பிறகு தான் பயமும் நடுக்கமும் நிற்கும்.

நீங்கள் என்ன எந்த கேள்வி கேட்டாலும் ஐந்து நாள் வகுப்பு வீடியோ என்று சொல்கிறீர்கள் என்று சிலர் கேட்கலாம்.

உதாரணமாக , காலில் ஆணி வந்தால் மஞ்சள் தூளையும்,  மருதாணி தூளையும் கலந்து வைத்தால் 30 நாளில் சரியாகிவிடும் .இதற்கு ஐந்து நாள் வகுப்புக்கு வர வேண்டிய அவசியமில்லை.சில வியாதிகளுக்கு வீட்டு வைத்தியம் செய்து சரி செய்து சரி செய்து கொள்ளலாம். 

ஆனால் சில வியாதிகள் உடலையும் மனதையும் முழுவதையும் சரி செய்தால் மட்டுமே சரியாகும்,  என்பதால்தான் நான் இதுபோல கூறுகிறேன்.

தினமும் காலை பழைய சாதம் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

பழைய சாதம் செய்வது எப்படி??

இரவு , பாரம்பரிய அரிசியை பிரஷர் குக்கரில் சமைத்து,  நன்றாக ஆறும் வரை காத்திருந்து,  அதன் பிறகு அந்த சாதத்தில் 5 முதல் 10 மடங்கு தண்ணீர் ஊற்றி,  இரவு முழுவதும் மூடி வைத்து காலையில் அந்த சாதத்தையும் தண்ணீரையும் நன்றாக கையில் பிசைந்து , சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக கட் செய்து அதில் கலந்து , கொஞ்சமாக மோர் அல்லது தயிர் கலந்த, தேவையான அளவு உப்பு கலந்நது காலை உணவாக இந்த பழைய சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்,
விட்டமின் பி12 கிடைக்கும் ,உடல் உஷ்ணம் இருப்பவர்களுக்கு உடல்  உஷ்ணம் குறையும், அனைத்து வியாதிகளும் குணமாகும்.

பழைய சாதம் தயாரிப்பதற்கு வடித்த சாதத்தை பயன்படுத்தக்கூடாது ,எலக்ட்ரிக்கல் குக்கரை பயன்படுத்தக்கூடாது .

பிரஷர் குக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிரஷர் குக்கர் இல்லாதவங்க ஒரு பாத்திரத்துல அரிசி வெச்சு தண்ணி அளவா வைத்து வடிக்காமல் சமையல் செஞ்சு அந்த சாப்பாட்டை பயன்படுத்தலாம்‌.

பிரஷர் குக்கர் விசில் நாமாக எடுத்து விடக்கூடாது, அது தானாக அடங்கும் வரை காத்திருக்க வேண்டும்.

இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்
அமைதியும் ஆரோக்கியமும் --மாத இதழ்
+918883805456

Wednesday, November 6, 2019

The truth behind the blood pressure (BP) - Healer Baskar

How to save us from cellphone radiation - Healer Baskar





கேள்வி எண் 110 : செல்போன் ரேடியேசனிலிருந்து நம்மை எப்படி காப்பாற்றிக்கொள்வது?

பதில் : செல்போனில் இருந்து ரேடியேஷன் வருகிறது இது மனித உடலுக்கு ஆபத்து என்று பலரும் கூறுகிறார்கள் இது உண்மைதான்.

ரேடியேஷன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் மனிதனுக்கு ஆபத்து என்று கூறுகிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. ரேடியேஷன் மிகக் குறைவாக இருந்தால் குறைவான ஆபத்து அதிகமாக இருந்தால் அதிகமான ஆபத்து

எனவே ரேடியேஷன் என்றாலே ஆபத்து தான். இதற்கு ஒரு அளவு வைக்க முடியாது .விஷம் என்றால் விஷம் தான் , குறைந்த விஷம் , அதிக விஷம் என்று இருக்கிறதல்லவா அதேபோல ரேடியேஷன் என்றாலே விஷம் தான்.

எனவே ரேடியேஷன் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது கட்டாயமாகும்.

அதனால் இனிமேல் செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று நான் கூறமாட்டேன்.

 செல்போனை பயன்படுத்தாமல் இருந்தால் மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுது செல்போன் இல்லாமல் வாழ்வது முடியாத காரியமாகி விட்டது .

நீங்கள் ஒருவேளை செல்போனை பயன்படுத்தாமல் இருந்தால் ரேடியேசன் தாக்குதல் வராது என்று கூறமுடியுமா ?? உங்கள் வீட்டில் மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்,  அலுவலகத்தில் மற்றவர்கள் பயன்படுத்துவார்கள் , நீங்கள் அமர்ந்திருக்கும் பஸ்ஸில் 50 பேர் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்,  அதிலிருந்த ரேடியேசன் உங்களைத் தாக்காதா ???.

நாம் இருக்கும் ஊரில் பல செல்போன்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை சூழ்ந்து இருக்கிறது .பல ரேடியோக்களில் கதிர்வீச்சுக்கள் நம்மை சூழ்ந்து இருக்கிறது .பல சாட்டிலைட் டிவிகளில் ரேடியேசன் சூழ்ந்திருக்கிறது. பக்கத்து காவல்நிலையத்தில் வாக்கிடாக்கி உட்பட நம்மை சுற்றி ஆயிரம் விதமான கதிர்வீச்சுக்கள் நம்மை சுற்றி இருக்கிறது. அதில் இருந்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்வது??.

சட்டைப் பையில் செல்போனை வைக்க வேண்டாம் அங்குதான் இருதயம் இருக்கிறது என்று கூறி இடுப்பில் மாற்றிக்கொள்கிறார்கள். இடுப்பில் கிட்னி இருக்கிறதே அப்பொழுது அது பாதிக்காதா??. உடம்பில் எந்த இடத்தில் வைத்தாலும் உடல் முழுவதும் பாதிக்கும்.

நீங்கள் செல்லும் அனைத்து வீடுகளிலும் கடைகளிலும் wi-fi இருக்கிறது .அதனது தாக்கம் நீங்கள் அறியாமல் உங்களுக்குள் செல்வது உங்களுக்கு தெரியுமா?

கதிர் வீச்சு என்பது பிக்பாஸ் போன்றது. நீங்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

எனவே செல்போனிலிருந்து வரும் ரேடியேஷனால்  ஏற்படும் சக்தி இழப்பை விட , நாம் நமது உடலில் உள்ள சக்தியை அதிகரிப்பதன் மூலமாக நம்மளை காப்பாற்றிக் கொள்ளலாம்.

எனவே நாம் மூச்சுப் பயிற்சி ,தியானம் ,வாக்கிங், ஜாக்கிங் ,உணவை ஒழுங்காக சாப்பிடுதல், தண்ணீரை ஒழுங்காக குடித்தல் ,மூச்சுக்காற்றை ஒழுங்கு செய்தல், தூய்மையான காற்றில் வாழ்தல் உடலில் உஷ்ணத்தை ஒழுங்கு செய்தல், உடலில் PH மதிப்பை ஒழுங்கு செய்தல்,  போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருத்தல் , சக்தி செலவாகும் விஷயங்களை நிறுத்துதல் , சக்தி அதிகமாகும் விஷயங்களை அதிகரித்தல்,  தன்னை மறந்து தூங்குதல்,  கர்ம யோகம்,  கிரியா யோகம் , பக்தியோகம்,  ஞானயோகம் ஆகிய யோகங்கள் செய்தல் இது போன்ற காரியங்களை அதிக படுத்துவதன் மூலமாக நம் சக்தியை அதிகப்படுத்தி,  நாம் ரேடியேசன் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதே சிறந்த வழி.

எனவே இனிமேல் கதிர்வீச்சை பற்றி யோசித்து பயப்படாமல்,  நமது சக்தியை அதிகப்படுத்தும் வேலைகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வரும் நாட்களில் இந்த ரேடியேஷன் அளவு அதிகமாகி கொண்டே தான் போகும் எனவே நாமும் சக்தியை அதிகப்படுத்தி அதற்கான வழிமுறைகளை அதிகரித்துக் கொண்டே தான் செல்லவேண்டும்.

எனவே ஒரு நாளில் 24 மணிநேரத்தில் பணத்திற்காக, குடும்பத்திற்காக, வியாபாரத்திற்காக , அலுவலகத்திற்காக  மற்றும் புகழுக்காக நேரம் செலவு செய்வதை சற்று குறைத்து விட்டு , உடலுக்காக , மனதிற் காக, உயிருக்காக , செல்ப் ஹேர் எனப்படும் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்காக,  ஆன்மீகத்திற்காக,  ஆரோக்கியத்திற்காக மற்றும்  சக்தியை அதிகரிப்பதற்காக நேரத்தை செலவிட வேண்டும் . இதுதான் சிறந்த வழி.

நல்லெண்ணெயில் வீட்டில் தீபம் இடுதல் ,நாட்டு மாட்டு சாணியை கொண்டு வீட்டில் மோழுகுதல்,  நல்ல மரங்களை வீட்டிற்கு அருகே வளர்த்தல், மண் மற்றும் சுண்ணாம்பை கொண்டு வீடு கட்டுதல் , டிவி ,செல்போன் wi- fi இல்லாமல் வாழுதல் , இதுபோன்ற நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. இருந்தாலும் நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் இதைப் பயன்படுத்துவது சிரமம்.

செல்போன் ரேடியேஷனை இயற்கை முறையில் குறைப்பது சம்பந்தமாக யாருக்காவது யோசனை இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் அதை புரிந்து கொண்டு அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

ஒரு முக்கியமான விஷயம்,  நீங்கள் சொல்லும் ஐடியா , செலவில்லாமல் இருக்க வேண்டும்.

ஒரு கம்பெனியின் பொருளை வாங்குங்கள் , செல்போனில் ஓட்டுங்க , வீட்டில மாட்டுங்க,  3000 கொடுங்க , 10000 கொடுங்க என்று கூறாமல் இருக்க வேண்டும்.

எளிமையான, சுலபமான, செலவில்லாத , ஐடியாக்களை மட்டுமே நான் வரவேற்கிறேன்.

இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்
+91-9944221007

( மூன்று நாள் யோகா விபாசனா எனப்படும் சைலண்ட் வகுப்பு சென்னையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. கலந்து கொள்ளுங்கள் )https://youtu.be/7UdzQ6iIbZM